search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பெண் காவலர்கள்"

    • பெண் காவலர்களுக்கு சட்டவகுப்பிற்கான இறுதி தேர்வு தொடங்கியது.
    • போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் நேரில் சென்று மேற்பார்வையிட்டார்.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி பேரூரணி காவலர் பயிற்சி பள்ளியில் பயிற்சி பெற்று வரும் பெண் காவலர்களுக்கு சட்டவகுப்பிற்கான இறுதி தேர்வு நேற்று தொடங்கியது. முதல் நாள் தேர்வை பயிற்சி பள்ளி காவல் கண்காணிப்பாளர் ராசராசன் அவர்கள் முன்னிலையில் தூத்துக்குடி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் நேரில் சென்று மேற்பார்வையிட்டார். நிகழ்வின்போது காவலர் பயிற்சி பள்ளி துணை முதல்வர் காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளர் ஜஸ்டின் ராஜ், நெல்லை பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கெதிரான குற்ற தடுப்பு பிரிவு காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளர் மாரிராஜன், முதன்மை கவாத்து போதகர் இன்ஸ்பெக்டர் பாஸ்கர், முதன்மை சட்ட போதகர் ஜென்ராஸ் பாபு ஆகியோர் உடனிருந்தனர்.

    ×